கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரேடியோ சிட்டி 91.1 பொழுதுபோக்கிற்கான பாடல்களை மட்டும் ஒளிபரப்பாமல் தனது பல்வேறு செயல்பாடுகள் மூலம் மக்களுக்கு சேவையினையும் வழங்கி வருகிறது.
அதன்படி, தமிழகம் முழுவதும் நிலவி வரும் வறட்சியால் மக்கள் குடிக்க நீரின்றி தவித்து வரும் நிலையில் அவர்களுக்கான நீர்த்தேவையினை பூர்த்தி செய்யும் விதமாக கோவை மக்களின் தாகம் தீர்க்க களமிறங்கியது ரேடியோ சிட்டி 91.1 எஃப்எம். இதற்காக "தாகம் தீர்ப்போம்" என்னும் திட்டத்தை துவங்கி ரேடியோ சிட்டி அடிமட்ட, குடிசைவாசிகள் வசிக்கும் பகுதிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான தண்ணீரை விநியோகிப்பதே இத்திட்டமாகும்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக "தாகம் தீர்ப்போம்" அமைப்பினர் வனவிலங்குகளுக்கு தண்ணீர் வழங்கும் பணியினையும் துவங்கியுள்ளனர். அதன்படி, வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியில், ரேடியோசிட்டியுடன் ஆர்க் பவுண்டேசன் மற்றும் ஸ்யாம்சுந்தர் வாட்டர் சப்பளை ஆகியோரும் இணைந்து தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர்.
அதன்படி, தமிழகம் முழுவதும் நிலவி வரும் வறட்சியால் மக்கள் குடிக்க நீரின்றி தவித்து வரும் நிலையில் அவர்களுக்கான நீர்த்தேவையினை பூர்த்தி செய்யும் விதமாக கோவை மக்களின் தாகம் தீர்க்க களமிறங்கியது ரேடியோ சிட்டி 91.1 எஃப்எம். இதற்காக "தாகம் தீர்ப்போம்" என்னும் திட்டத்தை துவங்கி ரேடியோ சிட்டி அடிமட்ட, குடிசைவாசிகள் வசிக்கும் பகுதிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான தண்ணீரை விநியோகிப்பதே இத்திட்டமாகும்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக "தாகம் தீர்ப்போம்" அமைப்பினர் வனவிலங்குகளுக்கு தண்ணீர் வழங்கும் பணியினையும் துவங்கியுள்ளனர். அதன்படி, வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியில், ரேடியோசிட்டியுடன் ஆர்க் பவுண்டேசன் மற்றும் ஸ்யாம்சுந்தர் வாட்டர் சப்பளை ஆகியோரும் இணைந்து தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர்.